முகப்பு
தருமபுரி

காவல் துறை சார்பில் இலவச இருதயப் பரிசோதனை முகாம்

தருமபுரி மாவட்டக் காவல் துறை மற்றும் திருப்பூர் காமன் இண்டியன்ஸ், அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் இலவச இருதயப் 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

தருமபுரி மாவட்டக் காவல் துறை மற்றும் திருப்பூர் காமன் இண்டியன்ஸ், அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் இலவச இருதயப் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்றது.
முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தொடங்கிவைத்தார். திருப்பூர் காமன் இண்டியன்ஸ் தலைவர் சேஷாத்திரி முன்னிலை வகித்தார். அப்பல்லோ மருத்துவமனை இருதய நிபுணர் முத்துக்குமார் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் பங்கேற்று தங்களது குழந்தைகளுக்கு இருதயப் பரிசோதனை செய்துகொண்டனர். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 
முகாமில், துணைக் காவல் கண்காணிப்பாளர் காந்தி, அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →