முகப்பு
தருமபுரி

உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

அரூரில் தொடங்கப்படவுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில்  மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஆர்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

அரூரில் தொடங்கப்படவுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில்  மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஆர்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,  2018-19-ஆம் கல்வி ஆண்டில் அரசு உண்டு உறைவிடப் பள்ளி  தொடங்கப்படவுள்ளது. இப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரையிலும் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடைகள், உணவு வசதிகள், கணினி பயிற்சி, தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். தாய், தந்தையை இழந்தவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், எஸ்.சி., எஸ்.டி, முஸ்லிம், துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தினரின் குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்க்கப்படுவர்.  
பொதுமக்கள் அரூர் 4 வழிச்சாலையில் உள்ள வட்டார வளமைய அலுவலக வளாகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் எனவும் அவரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →