முகப்பு
தருமபுரி

சூதாடியதாக 5 பேர் கைது

ஊத்தங்கரையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On : 15 மே, 2018 at 2:45 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

ஊத்தங்கரையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரை சின்னப்பனேரிக்கரை பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சூதாடிக் கொண்டிருந்த ஊத்தங்கரை காமராசர்நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (38), வினோத் (33), சங்கர் (35), அத்திப்பாடி பகுதியைச் சேர்ந்த சத்திராஜ் (27), கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி (42) ஆகிய 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.