லாரி ஓட்டுநர் மீது தாக்குதல்:4 பேர் கைது
மொரப்பூர் அருகே லாரி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகன் ம
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
மொரப்பூர் அருகே லாரி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் சிவகிரி (29). இவருக்கும், கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சித்தன் மகன் சீனன் (26) என்பவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், சிவகிரியை சிலர் தாக்கினார்களாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சீனன் (26), பிரசாத் (29), பாக்யராஜ் (36), கோவிந்தன் (50) ஆகியோரை மொரப்பூர் போலீஸார் கைது செய்தனர்.