கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியேற்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சு. மலர்விழி தலைமையில் நடைபெற்ற கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர். இதேபோல, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் தலைமையில் காவல் அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்று உறுதிமொழியேற்றனர்.