தருமபுரி

நக்ஸல் பாதிப்பு பகுதிகளைச் சேர்ந்தோர் இலவச இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தருமபுரி மாவட்டத்தில் நக்ஸல் பாதிக்கப்பட்ட ஊராட்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளோர், சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் சுயத் தொழில் தொடங்க தையல் இயந்திரங்கள் மற்றும் முடி திருத்தும் உபகரணங்களை இலவசமாகப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்பு விடுத்துள்ளார்.
தையல் இயந்திரங்களைப் பெற ஆயத்த ஆடைத் தயாரிப்பில் பயிற்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். முடிதிருத்தும் உபகரணங்களைப் பெற அதற்கான மையம் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களையும், விண்ணப்பப் படிவங்களையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வளாகத்திலுள்ள மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுச் சங்க அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்- 04342 232147. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி-அக். 31.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT