தருமபுரியில் மாற்றுத் திறனாளிக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, உதவித் தொகை, பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் 253 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளி நபருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்படிவம் ஆகியவற்றை ஆட்சியர் சு.மலர்விழி வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா கான், மாற்றுத் திறனாளி நல அலுவலர் பாபு, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.