தருமபுரி

தடுப்புச் சுவர் அமைக்கக் கோரிக்கை

DIN

அரூரை அடுத்த ஆட்டியானூர் புதூரில் சாலையோரம் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிப்பட்டி அழகிரி நகர்- ஆட்டியானூர் இணைப்புச் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்த சாலையானது தற்போது பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தில் தார்ச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆட்டியானூர் புதூர் எனுமிடத்தில் சாலையோரத்தில் விவசாயக் கிணறுகள் உள்ளன. சாலையின் வளைவான பகுதியில் மிகவும் ஆபத்தான நிலையில் இந்த திறந்தவெளி கிணறுகள் இருப்பதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஆட்டியானூர் புதூரில் சாலையோரத்தில் தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT