தருமபுரி

தருமபுரியில் மூன்றாவது நாளாக மழை

DIN

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
 தருமபுரி மாவட்டத்தில், கடந்த மூன்று நாள்களாக பகல் வேளைகளில் லேசான சாரல் மழையும், இரவில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. இதனால், வெப்பநிலை தணிந்து இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசுகிறது. மேலும், தொடர்ந்து பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் சிறிது அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 தருமபுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை பெய்த மழையளவு நிலவரம் மி.மீட்டரில்: தருமபுரி 21, அரூர் 24, பாப்பிரெட்டிப்பட்டி 3.2, பாலக்கோடு 12, பென்னாகரம் 15, ஒகேனக்கல் 1.2. மாவட்டத்தின் மொத்த மழையளவு 76.4 மி.மீ., சராசரி மழையளவு 10.91 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT