தருமபுரி

விளையாட்டுப் போட்டி: செந்தில் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

DIN

தருமபுரி சரக அளவிலான விளையாட்டுப் போட்டியில், தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.
அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தருமபுரி சரக அளவிலான எரிபந்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் 14 வயதுக்குள்பட்ட பிரிவில், தருமபுரி சரக அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 14 வயதுக்குள்பட்ட இரு பிரிவிலும் முதலிடம் பெற்றனர்.
அதேபோல, வியாழக்கிழமை சரக அளவிலான மேஜைப் பந்து போட்டி, நார்த்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப் போட்டியில் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் முறையே 14 வயதுக்குள்பட்ட மாணவியர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் டி.ஆர்.சுவேதா, இரட்டையர் பிரிவில் டி.வைஷ்ணவி, 17 வயதுக்குள்பட்ட மாணவியர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆர்.நிஷா மற்றும் இரட்டையர் பிரிவில் எம்.பிரார்த்தனா மற்றும் 14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆர்.நிசாந்த்குமார், இரட்டையர் பிரிவில் எஸ்.அஸ்வதர்சன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் இரட்டையர் பிரிவில் எம்.குருபிரசாந்த், ஆர்.சுதர்சன்  இரண்டாம் இடம் பெற்றனர். 
இந்த மாணவ, மாணவியரை, செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் சி.கந்தசாமி, துணைத் தலைவர்  மு.மணிமேகலை, நிர்வாக அலுவலர் சி.சக்திவேல், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வித் துறை ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT