தருமபுரி

ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

DIN

தருமபுரி அருகே புலிகரையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பயிற்சி நிறுவன முதல்வர் வெ.ஹேமலதா தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்து பேசினார். புலிகரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செந்தில் பேசினார். இதையொட்டி, மாணவ, மாணவியரின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
 இதைத் தொடர்ந்து, புலிகரை ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை தூய்மை செய்யும் பணியிடும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர். தொடக்க விழாவில், திட்ட அலுவலர் ச.செந்தில்குமார், உதவி திட்ட அலுவலர் ப.சிலம்பரசி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த முகாம், வரும் பிப். 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT