தருமபுரியில் 61 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், 6 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் நவீன செயற்கை கால்கள், 40 பேருக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 200 மதிப்பில் மின் மோட்டர் பொருத்திய தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொண்ட 15 பேருக்கு ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 925 மதிப்பில் தங்க நாணயம் ஆகியவற்றை வழங்கிப் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரகமதுல்லா கான், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.