தருமபுரி

காணொலி மூலம் விளையாட்டு விடுதி, பள்ளிக் கட்டடம் திறப்பு

DIN

புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட தருமபுரி விளையாட்டு விடுதி மற்றும் பெரியாம்பட்டியில் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை காணொலி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.84.70 லட்சத்தில் விளையாட்டு விடுதியும், பெரியாம்பட்டியில் ரூ.2.64 கோடியில் ஆய்வகங்களுடன் கூடிய வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிகள் அண்மையில் முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இவ்விரு கட்டடங்களையும், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதையொட்டி, தருமபுரி விளையாட்டு விடுதி மற்றும் பெரியாம்பட்டி பள்ளிக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி பங்கேற்று குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் சங்கர், விளையாட்டு அலுவலர் ஜி.எஸ்.ராஜேந்திரன், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT