தருமபுரி

பொங்கல் ஊக்கத் தொகை வழங்கக் கோரிக்கை

DIN

பொங்கல் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோர் மற்றும் துப்பரவுப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஏஐடியுசி தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோர், துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் சார்பில், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு: ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். 
அரசு அறிவித்த பொங்கல் ஊக்கத் தொகையினை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோர், தூய்மைக் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள மாத ஊதியத்தையும், நீர்த்தேக்கத் தொட்டி சுத்திகரிப்பு ஊதியத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் கூடுதலாக பணியாற்றும் நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு புதிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT