தருமபுரி

சி.ஏ. தேர்வு: கடத்தூர் கிரீன்பார்க் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

DIN

கடத்தூர் கிரீன்பார்க்  சி.பி.எஸ்.இ.  பள்ளி மாணவர்கள் சி.ஏ. இரண்டாம் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
ஐ.சி.ஏ.ஐ. சார்பில், தேசிய அளவிலான பட்டயக் கணக்கர் தேர்வு அண்மையில் நடைபெற்றது.  இந்தத் தேர்வுகளில் பங்கேற்ற கடத்தூர் கிரீன்பார்க்  சிபிஎஸ்இ  பள்ளி மாணவ, மாணவியர் முதல் நிலைத் தேர்வில் 36 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து, 2-ஆம் நிலைத் தேர்வில் 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையடுத்து, சி.ஏ. இரண்டாம் நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவியருக்கு  புதுதில்லியில்,  ஐசிஏஐ நிறுவனம் சார்பில், ஊக்கத் தொகைகள்  மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், சி.ஏ. தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கிரீன்பார்க்  கல்வி நிறுவனங்களின் தலைவர் எவரெஸ்ட் ஆர். முனிரத்தினம், குலோபல் லா  பவுண்டேசன் நிறுவனத் தலைவர் ரா. சரவண அரவிந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
 இதில், பள்ளியின் செயல் அலுவலர் ராஜா, பள்ளி முதல்வர் திவ்ய ஸ்ரீ, ஊடகவியலாளர் மகேந்திரன்,  பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT