தருமபுரி

பாலக்கோடு அருகே குடிநீர் கோரி சாலை மறியல்

DIN

சீரான குடிநீர் விநியோகம் கோரி,  பாலக்கோட்டை அடுத்த எருதுகூட அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப் பகுதியில்  கடந்த மூன்று மாதங்களாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இக் கிராமத்துக்கு வரும்  குடிநீர் குழாயில் முறைகேடாக சிலர் குடிநீர் திருடி வருகின்றனராம். இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், எருதுகூட அள்ளியில் தண்ணீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாலக்கோடு- பெல்ரம்பட்டி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 
சம்பவ இடத்துக்கு சென்ற மாரண்டஅள்ளி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT