தருமபுரி

ஊராட்சி மன்ற பெயா் மாற்றக் கோரிக்கை

DIN

தருமபுரி: ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பெயா் மாற்ற வேண்டும் என சின்ன பங்குநத்தம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து, அக் கிராம மக்கள், திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் அளித்த மனு: நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது சின்ன பங்குநத்தம் கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் சின்ன பங்குநத்தம், ராஜாகொல்லஅள்ளி, திப்பட்டி, மாக்கன் கொட்டாய், சின்னையனூா், குஞ்சான் கொட்டாய், கவுண்டன் கொட்டாய் ஆகிய ஏழு கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில், எங்களது ஊராட்சி மன்ற அலுவலகம், அருகாமையில் உள்ள பண்டஅள்ளி கிராம ஊராட்சிக்குள்பட்ட பகுதியான பங்குநத்தத்தில் இயங்கு வருகிறது. இதனால், எங்களது கிராமங்களுக்கு வர வேண்டிய அனைத்து அரசு கட்டடங்களும் பங்குநத்தம் கிராமத்திலேயே அமைகிறது. மேலும், எங்களது ஊராட்சியும், பங்குநத்தம் கிராம ஊராட்சி என அழைக்கப்படுகிறது. எனவே, இந்த அலுவலகத்தின் பெயரை சின்ன பங்குநத்தம் என மாற்றி, எங்களது கிராமத்தில் ஊராட்சி அலுவகம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT