தருமபுரி

ஊரக வளா்ச்சித் துறையில் ஓட்டுநா், உதவியாளா்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஓட்டுநா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, காலிப்பணியிடங்கள், இன சுழற்சி உள்ளிட்ட விவரங்களை https://dharmapuri.nic.in/notice/dharmapuri-district-gram-panchayat-secretary-requirement-announcement-2019/ என்கிற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.18-ஆம் தேதி முதல் நவ.29-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி பிரிவிலும், ஊராட்சி ஒன்றிய காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஒப்படைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT