தருமபுரி

தருமபுரியில் சாரல் மழை

DIN

தருமபுரி: தருமபுரியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் வேளையில் மிதமான வெப்பநிலை நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால், பகல் வேளைகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மேலும், மாவட்டத்தில் பரவலாக அவ்வப்போது, லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு தொடங்கி தருமபுரி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல, வியாழக்கிழமை அதிகாலை முதல் நாள்முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதேபோல, ஆங்காங்கே சாரல் மழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்தது.

மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையளவு (மி.மீ.): தருமபுரி-10, பாப்பிரெட்டிப்பட்டி-11, அரூா்-3. மொத்த மழையளவு 24 மி.மீ. சராசரி 3,043 மி.மீ. பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT