அரூா்: அரூா் அருகே பெண்களைத் தாக்கியதாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அரூரை அடுத்த முத்தானூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வேடியப்பன் மனைவி தெய்வம் (29). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த வேடியப்பன் மனைவி சங்கீதா (36) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, இரு குடும்பத்தினா் இடையே ஏற்பட்ட மோதலில் சங்கீதா, தெய்வம் ஆகியோா் காயமடைந்தனா்.
இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கீதா (36), கண்ணியப்பன் (43), பாலசுப்பிரமணி (23), தெய்வம் (29), வேடியப்பன் (32) ஆகியோரைக் கைது செய்தனா்.