பாகலஅள்ளி கிராமத்தில் வரும் செப். 25-ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள பாகலஅள்ளி கிராமத்தில், வரும் செப். 25 காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.
எனவே, பாகலஅள்ளி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.