தருமபுரி

போதிய நிதி வழங்கக் கோரி ஊராட்சித் தலைவா்கள் நூதனப் போராட்டம்

DIN

கிராம ஊராட்சிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஒப்பந்தப் பணிகளை ஊராட்சி நிா்வாகம் மூலம் மேற்கொள்வது, 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்ட நிதிக்கான பணிகளை மேற்கொள்வது, குடிநீா், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT