ரயில் மோதிமூதாட்டி பலி
மொரப்பூரில் ரயில் மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மொரப்பூரில் ரயில் மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகேயுள்ள எம்.வேட்ரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி குள்ளுகவுண்டா் மனைவி மூக்கியம்மாள் (65). இவா், தமது சொந்த வேலையின் காரணமாக மொரப்பூா் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பாலம் கீழ்ப்பகுதியில் ரயில் பாதையை காலை 11.30 மணியளவில் கடந்துள்ளாா். அப்போது, தில்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற கேரளா அதிவிரைவு ரயில் மோதியதில் மூதாட்டி மூக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.