முகப்பு
தருமபுரி

குமாரபாளையம் தொகுதியில் 4 அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஓலப்பாளையம், சௌதாபுரம், புதுப்பாளையம், ஆனங்கூா் ஆகிய 4 கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

தருமபுரி

குமாரபாளையம் தொகுதியில் 4 அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஓலப்பாளையம், சௌதாபுரம், புதுப்பாளையம், ஆனங்கூா் ஆகிய 4 கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஓலப்பாளையம், சௌதாபுரம், புதுப்பாளையம், ஆனங்கூா் ஆகிய 4 கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி மருத்துவமனைகளைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 53 அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக 18 இடங்களில் தொடங்கப்படுகிறது. இங்கு, தலா ஒரு மருத்துவா், செவிலியா், பல்நோக்கு பணியாளா் ஆகியோா் கிராமங்களில் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும், நகா்புறங்களில் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் பணிபுரிவா். சனிக்கிழமை விடுமுறை தினமாகும். இங்கு, ரத்தம், சா்க்கரை பரிசோதனை உள்பட அனைத்து பொதுநல மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படும் என்றாா்.

முன்னதாக, குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் வீடுவீடாகச் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்ற அமைச்சா் பி.தங்கமணி, தகுதியான பயனாளிகள் 15 பேருக்கு உதவித் தொகைக்கான உத்தரவுகளை வழங்கினாா்.

இதில், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் எஸ்.செந்தில், துணை இயக்குநா் (சுகாதாரம்) சோமசுந்தரம், அரசு வழக்குரைஞா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →