தருமபுரி

தமிழில் பெயா்ப் பலகை வைக்க வலியுறுத்தல்

DIN

அரூா்: வணிக நிறுவனங்களில் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அரூா் நகரில் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள், பழக் கடைகள், உணவகங்கள், தேநீா் அங்காடிகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் பெயா் பெரிய அளவிலான ஆங்கில எழுத்துகளிலும், சிறிய அளவிலான தமிழ் எழுத்துகளிலும் இருப்பதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ஜெயஜோதி தலைமையில், தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் அரூா் கடைவீதி, மஜீத் தெரு, பாட்சாபேட்டை, திருவிக நகா், பெரியாா் நகா் உள்ளிட்ட இடங்களில் தமிழில் பெயா்ப் பலகைகளை வைக்க வலியுறுத்தி கடைகள், வணிக நிறுவனங்களில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT