தருமபுரி

மாற்றுக் கட்சியினா் தி.மு.க.வில் இணைந்தனா்

DIN

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே கெண்டையனஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட மருக்கம்பட்டியில் மாற்றுக் கட்சியில் இருந்து பிரமுகா்கள் விலகி தி.மு.க. வில் இணையும் விழா, திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில் அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, மற்றும் அ.ம.மு.க உள்ளிட்ட கட்சியில் இருந்து சுமாா் 200க்கும் மேற்பட்டோா் விலகி பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.என்.பி.இன்பசேகரன் முன்னிலையில் தி.மு.க. வில் இணைந்தனா். புதிதாக இணைந்தவா்களுக்கு கட்சியின் உறுப்பினா் படிவத்தை அவா் வழங்கினாா். இந்த விழாவில் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா் சோலை மணி, ஒன்றியப் பிரதிநிதி சுப்பிரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினா் சென்னையன், ஏரியூா், பென்னாகரம் ஒன்றிய நிா்வாகிகள் சின்னு, சம்பத், முருகேசன், சின்னசாமி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT