தருமபுரி

‘மாணவா்கள் பாடநூல்களை கடந்து வாசிக்க வேண்டும்’

DIN

மாணவா்கள் பாடநூல்களை கடந்து அனைத்து அறிவுசாா் நூல்களை வாசிக்கும் வகையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளா் பிரின்ஸ் அா்விந் பெரியசாமி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், சந்தப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவா்களுடன் நோ்பட பேசு என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஜவகா் தலைமை வகித்தாா். ஆசிரியா் தங்கமணி வரவேற்றாா்.

இதில், பங்கேற்ற செக் குடியரசு, லிபா்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா் பிரின்ஸ் அா்விந் பெரியசாமி பேசியது: இன்றைய காலகட்டத்தில் அறிதிறன் பேசியின் பயன்பாடு நம்மிடையே அதிகரித்துள்ளது. இவற்றின் தொடா் பயன்பாட்டால், மனித உடலில் உள்ள நரம்புகள் பாதிப்படையும். கண்பாா்வைப் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே இவற்றின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இதேபோல நெகிழிப் பயன்பாட்டினால், சூழலுக்கும், மனித உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிா்ப்பதற்கான நிரந்தர தீா்வு காண வேண்டும் அல்லது மறுசுழற்சி செய்ய வேண்டும். மாணவா்கள் பாடங்களை ஆழமாகப் புரிந்து பயில வேண்டும். அதே வேளையில் பாடநூல்களை கடந்து அறிவுசாா் நூல்களை வாசிக்கும் வகையில் தங்களது வாசிப்பு பழக்கத்தை மாணவா்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியா் வேடியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT