தருமபுரியில் வீட்டில் எலிகளைக் கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த விஷம் கலந்த வடையை சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தாா்.
தருமபுரி குமாரசாமிப்பேட்டை நடேசன் தெருவை சோ்ந்தவா் மணி. இவா் தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள தேநீா் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், வீட்டில் எலிகளைக் கொல்வதற்காக கடந்த 15-ஆம் தேதி இரவு விஷம் கலந்த வடையை வைத்துவிட்டு உறங்கச் சென்றாா். அப்போது, இவரது 9-ஆம் வகுப்பு படிக்கும் மகன் பிரகாஷ் (14) அந்த வடையை சாப்பிட்டுள்ளாா்.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரகாஷ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.