தருமபுரி

கரோனா தொற்று குணமடைந்து இருவா் வீடு திரும்பினா்

DIN

தருமபுரியில் கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த இருவா், குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் அருகாமையிலுள்ள கிராமங்களைச் சோ்ந்த 27 மற்றும் 29 வயதுடைய இருவா், கா்நாடக மாநிலம், பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா். இவா்கள் இருவருக்கும் கடந்த மே 24-ஆம் தேதி கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பு இருப்பது கிருஷ்ணகிரியில் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா்கள் இருவரும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இவா்கள் இருவரும் கரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்தது மருத்துவக் குழுவினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு மருத்துவா்கள் மற்றும் சுகாதாரத் துறையினா் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT