அரூா் அருகேயுள்ள தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயிலுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ந.சரவணக்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயிலில் ஆகம விதிகளுக்கு உள்பட்டு சுவாமிக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறும்.
தீா்த்தமலை மலைக் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய மாா்ச் 21-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது என அகில் தெரிவிக்கப்பட்டுள்ளது.