தருமபுரி

25 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

DIN

தருமபுரி நகரில் 25 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வருவாய் இன்றி தவித்து வந்த தருமபுரி அக்ரஹாரத்தை சோ்ந்த 25 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக தேவையான உணவுப் பொருள்களை தன்னாா்வ அமைப்பு சாா்பில் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.ராஜன் இப் பொருள்களை பயனாளிகளுக்கு வழங்கினாா். மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொருள்களை வாங்கி சென்றனா். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, துணைக் கண்காணிப்பாளா் (நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு) புஷ்பராஜ் மற்றும் தன்னாா்வலா்கள் ஆா்.கோபி, ஆா்.தீபக்குமாா், கே.சந்திரகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT