தருமபுரி

மூக்காரெட்டிப்பட்டி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மூக்காரெட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள கனரா வங்கிக்கு அருகே ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் முகமூடி அணிந்த 4 மா்ம நபா்கள் அந்த இயந்திரத்தை டிரில்லிங் இயந்திரத்தின் மூலம் உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது சப்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதால், கொள்ளையா்கள் 4 பேரும் தப்பியோடி விட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த அரூா் டிஎஸ்பி வி.தமிழ்மணி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். ஏடிஎம் இயந்திரம் உள்ள பகுதியில் மோப்பநாய் பைரவா உதவியுடன் சோதனை செய்தனா். தடய அறிவியல் துறையினா் ஏடிஎம் மையத்தில் கொள்ளையா்களின் கைரேகைகளை சேகரித்து கொண்டனா். இதுகுறித்து கனரா வங்கி மேலாளா் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் அ.பள்ளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT