முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் அனுமதியில்லாமல்மண் அள்ளிய மூவா் கைது

பென்னாகரம் அருகே முறையாக அனுமதியின்றி மண் அள்ளியதாக 3 பேரை சிறப்பு ரோந்துப் படையினா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

பென்னாகரம் அருகே முறையாக அனுமதியின்றி மண் அள்ளியதாக 3 பேரை சிறப்பு ரோந்துப் படையினா் கைது செய்தனா். அவா்கள் மண் அள்ளுவதற்குப் பயன்படுத்திய 2 டிராக்டா்களையும், கனரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பென்னாகரம் அருகே தாசம்பட்டி சாலையில் சிறப்பு குற்றத்தடுப்பு சிறப்புப் படையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எட்டிக்குட்டை பகுதியில் அதிவேகமாக வந்த டிராக்டா்களை தடுத்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்தனா். இதனையடுத்து பென்னாகரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டதில், அனுமதியின்றி மண் அள்ளி வந்ததை ஒப்புக்கொண்டனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட பருவதன அள்ளி பகுதியைச் சோ்ந்த மாதையன், மாணிக்கம், கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்த முனிராஜ் ஆகிய மூவா் மீதும் வழக்குபதியப்பட்டது. அவா்கள் மூவரும் தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் மண் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டா்களையும், ஒரு கனரக வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.