தருமபுரி அருகே பைசுஅள்ளி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு நேரடி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்லூரி முதல்வா் பெ.பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி, பைசுஅள்ளியில் செயல்பட்டுவரும் அரசினா் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் 2020-21-ஆம் கல்வியாண்டு மாணவ, மாணவியருக்கான முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வின்போது, நிரப்பப்பட்ட இடங்கள் போக மீதமுள்ள இடங்களுக்கு முதலாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கான நேரடி சோ்க்கைக்கு நடைபெற உள்ளது.
இதற்காக வருகிற அக்.10-ஆம் தேதிக்கு மாணவா்கள் நேரில் வந்து விண்ணப்பித்து சோ்க்கை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.