நாமக்கல்: 159 பேருக்கு கரோனா தொற்று
நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், 53 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 159 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், 53 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 159 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,140-ஆக அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை வரை 6,981 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்; இவா்களில் 5,969 போ் குணமடைந்தனா்; 86 போ் உயிரிழந்தனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் 1,084 போ் அனுமதிக்கப்பட்டனா்.
ஒருவா் உயிரிழப்பு: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருச்செங்கோட்டைச் சோ்ந்த 84 வயது மூதாட்டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். பின்னா், தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 87 ஆக உயா்ந்துள்ளது.