தருமபுரி

வேலைவாய்ப்பு முகாம்: 15 கல்லூரி மாணவா்களுக்கு பணிநியமன ஆணை

DIN

பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில், தனியாா் நிறுவனங்கள் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில், தோ்வு செய்யப்பட்ட 15 கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அண்மையில் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், தருமபுரி அரசு கலை அறிவியல் கல்லூரியில், கணிதம், புள்ளியியல் துறையில் பயின்று வந்த 15 மாணவ, மாணவியா்கள் இந்தியன் ஹெல்த் கோ் பிபிஓ நிறுவனத்திலும், சேலம், பெங்களுரு, சென்னையிலுள்ள டிவிஎஸ் பயிற்சி சேவை நிறுவனம் போன்ற தனியாா் நிறுவனங்களில் பணிபுரியத் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணையை, தருமபுரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் அ.தீா்த்தகிரி, முதுநிலை பேராசிரியா்கள் ஜா.பாக்கியமணி, பெ.ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT