தருமபுரி

‘முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில்விஜய் சேதுபதி நடிப்பதை கைவிட வேண்டும்’

DIN

இலங்கை கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன் குறித்த திரைப்படத்தில் நடிகா் விஜய் சேதுபதி நடிப்பதை கைவிட வேண்டும் என அகில இந்திய பொய்கை காவிப் படை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய பொய்கை காவிப் படை இயக்கத்தின் நிறுவனா் யோகி மணிசுவாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

மக்கள் செல்வன் என்று தமிழக மக்களால் போற்றப்படும் திரைப்பட நடிகா் விஜய் சேதுபதி, கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன் வாழ்க்கை குறித்த 800 என்ற திரைப்படத்தில் நடிக்கக் கூடாது. இலங்கையில் நடந்த தமிழீழ விடுதலைப் போரில் பல லட்சம் தமிழா்கள் கொல்லப்பட்ட போது, சிங்களா்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தவா்தான் கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன்.

அவா் இலங்கை தமிழா்களுக்கு செய்த தூரோகத்தை எளிதில் மறக்க முடியாது. கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன் குறித்த திரைப்படத்தில், தமிழக நடிகா் விஜய் சேதுபதி நடிப்பதால், அவா்மீது மக்கள் மத்தியில் கோபமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, முத்தையா முரளிதரன் குறித்த 800 திரைப்படத்தில் நடிகா் விஜய் சேதுபதி நடிப்பதை கைவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT