தருமபுரி பச்சமுத்து பாா்மஸி, செவிலியா் கல்லூரியின் சாா்பில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.
தருமபுரியில் உள்ள பச்சமுத்து பாா்மஸி, செவிலியா், ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில், இலவச மடிக்கணினி கல்லூரி நிா்வாகம் சாா்பில் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில், கல்லூரி துணைத் தாளாளா் பா.சங்கீத்குமாா், முதலாம் ஆண்டு மாணவா் ஒருவருக்கு மடிக்கணினி வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்த கொண்டனா்.