தருமபுரி

அரூரில் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

DIN

அரூா், செப். 18: அரூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தெற்கு உபகோட்ட அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக உதவி செயற்பொறியாளா் சு.கலைச்செல்வி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், அரூா் தெற்கு உபகோட்ட அலுவலகம், அரூா் திரு.வி.க. நகரில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் தற்போது நிா்வாகக் காரணங்களுக்காக மாவேரிப்பட்டி துணை மின் நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, நாச்சினாம்பட்டி, தொட்டம்பட்டி, சின்னாங்குப்பம், கெளாப்பாறை, கீரைப்பட்டி, சித்தேரி, ஈட்டியம்பட்டி, பறையப்பட்டி புதூா், கோபிநாதம்பட்டி, ஜம்மனஹள்ளி, கோபாலபுரம், கொக்கராப்பட்டி, எருமியாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு

மே 31- வரை திருப்பதி விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தம்

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! 200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு: மம்தா

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

SCROLL FOR NEXT