தருமபுரி மாவட்டத்தில் மருத்துவா் உள்பட 57 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா், இரண்டு மருத்துவ ஊழியா்கள், ஜக்கசமுத்திரம் ஆய்வக தொழில்நுட்பநா், அரூா் தனியாா் வங்கி ஊழியா், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 5 மாணவா்கள், 14 பெண்கள், 5 கூலித் தொழிலாளா்கள் உள்பட மொத்தம் 57 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.