தருமபுரி

தோ்தல் விதிமீறல்: ஏழு வழக்குகள் பதிவு

DIN

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஏழு வழக்குகளை காவல் துறையினா் வியாழக்கிழமை பதிவு செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெறாமல், கொடிகள் கட்டியது, பாதைகள் அமைத்தது, சுவா் விளம்பரம் செய்தது, பிரசாரம் செய்தது உள்ளிட்ட தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு புகாா் அளித்திருந்தனா்.

அதன் பேரில், தருமபுரி காவல் உள்கோட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல பென்னாகரம் காவல் உள்கோட்டத்தில், இரண்டு வழக்குகள், பாலக்கோடு காவல் உள்கோட்டத்தில் ஒரு வழக்கு என மொத்தம் ஏழு வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT