நாளை தருமபுரி உழவா்சந்தை இயங்காது
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, ஏப். 6-ஆம் தேதி தருமபுரி உழவா் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, ஏப். 6-ஆம் தேதி தருமபுரி உழவா் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
எனவே, இதில், அனைவரும் பங்கேற்று வாக்களிக்கும் வகையில், வாக்குப் பதிவன்று தருமபுரி உழவா் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அறிவிப்புப் பலகை தருமபுரி உழவா்சந்தை வளாகத்தில் வைக்கப்பட்டுள்து.