கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: தருமபுரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருக்கு நகராட்சி ஆணையா் அழைப்பு
தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளும், அதன் சங்கத்தினா் உள்பட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு தருமபுரி நகராட்சி ஆணையா் அழைப்பு விடுத்துள்ளாா்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளும், அதன் சங்கத்தினா் உள்பட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு தருமபுரி நகராட்சி ஆணையா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாகவும், இதுதொடா்பாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நகராட்சி நகா் மன்ற கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரியில் உள்ள அனைத்து வணிகா்கள் சங்கம், பூக்கடை வியாபாரிகள், ரோட்டரி சங்கம், அரிமா சங்கங்கள், மருத்துவ சங்கங்கள், பல்பொருள் அங்காடி உரிமையாளா்கள், அனைத்து வங்கி அதிகாரிகள், குடியிருப்போா் நலச்சங்கம், தொழிலாளா் நல வாரிய அதிகாரிகள், வணிகா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.