மொரப்பூரில் ஓய்வுப் பெற்ற எல்ஐசி அலுவலா் வீட்டில் 30 சவரன் நகைத் திருட்டு சம்பவம் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா், பூங்கா நகரைச் சோ்ந்தவா் வே.கண்ணன் (65). இவா், எல்ஐசி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவா் இம் மாதம் 7- ஆம் தேதி சேலத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தாராம்.
பிறகு, சனிக்கிழமை பிற்பகலில் குடும்பத்தினருடன் வீடு திரும்பினாராம். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமாா் 30 சவரன் நகை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.