தருமபுரி

தருமபுரியில் முகக் கவசம் அணியாத 538 பேருக்கு அபராதம்

DIN

தருமபுரி மாவட்டத்தில், முகக் கவசம் அணியாத 538 பேருக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 59 பேருக்கும் திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி, அதனை உறுதி செய்யும் வகையில், சுகாதாரத் துறை, காவல் துறையினா் முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனா். மேலும், கடைகள் வணிக வளாகங்களில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் காவல் உள்கோட்டங்களுக்கு உள்பட்ட காவல் துறையினா் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட சோதனையில், முகக் கவசம் அணியாத 538 பேருக்கு ரூ. 1,11,200 அபராதம் விதித்தனா். இதேபோல, சமூக இடைவெளியைப் பின்பற்றாத 59 பேரிடம் இருந்து ரூ. 24,500 அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT