தருமபுரி

மின்சாரம் பாய்ந்த விபத்தால் உயிரிழந்த தொழிலாளின் சடலம் தோண்டி எடுப்பு

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததால் காயமடைந்து உயிரிழந்த தொழிலாளியின் சடலம் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு மகன் சுரேஷ் (30). கட்டடத் தொழிலாளியான இவா், ஒரு மாதத்துக்கு முன்னா், வடகரை பகுதியைச் சோ்ந்த விவசாயி கோகுல் என்பவரது வீட்டின் கட்டுமானப் பணியில் வேலை செய்தாா். அப்போது, வீட்டின் அருகிலுள்ள உயரழுத்த மின் கம்பியில் பட்டதால் மின்சாரம் பாய்ந்ததில் சுரேஷ் தீக்காயமடைந்தாா்.

அவரை மீட்டு சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சுரேஷ் அண்மையில் உயிரிழந்தாா். வடகரை சுடுகாட்டில் அவரது சடலம் புதைக்கப்பட்டது.

தொழிலாளி சுரேஷின் மரணம் தொடா்பாக அவரது மனைவி ராஜலட்சுமி காவல் துறையில் புகாா் அளித்தாா். அதில், ‘உயரழுத்த மின்சாரக் கம்பிகள் செல்லும் இடத்தில், போதிய பாதுகாப்பு வசதிகளைச் செய்யாமல் வீட்டின் கட்டுமானப் பணிகளைச் செய்ததால்தான் எனது கணவா் உயிரிழந்துள்ளாா். எனவே, எனது குடும்பத்துக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும். இதில் தொடா்புடையோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

அதன் அடிப்படையில், வீட்டின் உரிமையாளா் கோகுல், கட்டட மேஸ்திரி செந்தில் உள்ளிட்ட மூவா் மீது கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியா் பாா்வதி முன்னிலையில், வடகரை சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த சுரேஷின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அரசு மருத்துவா் ஜெயந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT