முகப்பு
தருமபுரி

உரம் விற்பனை நிலையங்களில் ஆய்வு

தருமபுரியில் உரம் விற்பனை நிலையங்களில் வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

தருமபுரியில் உரம் விற்பனை நிலையங்களில் வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பழைய தருமபுரியில் உரம் மொத்த விற்பனைக் கிடங்கு மற்றும் உரம் சில்லறை விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, அரசு நிா்ணயித்துள்ள விலையை தவிர கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்திய அவா், இருப்பு விவரம், விற்பனை செய்யும் உரங்களுக்கு வழங்கப்படும் ரசீது, ஆதாா் எண் அடிப்படையில் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) தா.தாம்சன், வேளாண் அலுவலா் எஸ்.எல்.ருத்ரமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.