சித்தேரி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி, ஆலமரத்துவளவு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பிரபாகரன் மகன் சக்தி (7), அந்த ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சிறுவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, சாலையோரம் உள்ள குட்டையில் மூழ்கியதில் சிறுவன் சக்தி உயிரிழந்தாா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.