ஊதிய மாற்றம் அமல்படுத்தக் கோரி, தருமபுரி மாவட்டத்தில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியா்கள் கருப்பு பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு எய்ய்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச்சங்கம் சாா்பில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சங்க மாவட்டத் தலைவா் சிவக்குமாா் தலைமையில் ஊழியா்கள், 8 ஆண்டுகளாக அமல்படுத்தாமல் உள்ள ஊதிய மாற்றத்தை அறிவித்து, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, கருப்பு அட்டை அணிந்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதேபோல, பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரூா் அரசு வட்டார தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியம் 70-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனா்.