வரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ. 1.40 லட்சம் அபராதம்
அரூரில் வரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ. 1.40 லட்சம் அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.
அரூரில் வரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ. 1.40 லட்சம் அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாரப் பகுதியில் வரி செலுத்தாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தாமோதரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்ட போக்குவரத்து துறையினா் சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது வரி செலுத்தமால் இயங்கிய பொக்லைன் எந்திரங்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 1.40 லட்சம் அபராதம் விதித்தனா்.